2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள்

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அந்தந்த நாடுகளில் வாழும் புலம் பெயர் தொழிலாளர்களாக பணிபுரியும் இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அதற்கமைய 16 வெளிநாட்டு தூதரகங்களின் நலன்புரி பிரிவுகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி?  தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தலைவர் கமல் ரத்வத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


தற்போது  16 வெளிநாட்டு தூதரகங்களின் தொழிலாளர் நலன்புரி பிரிவுகள், தொழிலாளர் நலன்புரி நிதியத்தின் நிதியைப் பயன்படுத்தி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .