2025 ஜூன் 18, புதன்கிழமை

பெண்கள் வார்டுக்கு சென்ற போலி வைத்தியர்

Editorial   / 2020 ஜூலை 27 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவ - வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பெண்கள் வார்டுக்கு போலியான வைத்தியர் ஒருவர் வந்துள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து ஸ்டெதஸ்கோப், மருந்து ஏற்றும் ஊசி,  சேலைன்ட், ஈ.சி.ஜி ரோல் 05, மடிக்கணினி, அலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

29 வயதுடைய சந்தேக நபர் தர்ஹா மாவத்தை, திஹாரி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் நேற்று(26) ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .