2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பேராயர் மெல்கம் ‘வெறுப்புத்தீ பரப்புகிறார்’

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ரத்தன தேரரைப் பார்வையிடுவதற்காக, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நேற்று (03) காலை அங்கு சென்றிருந்​தமை குறித்து, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, இதனூடாகப் பிரிவினைவாத மற்றும் வெறுப்புத் தீக்கு காற்று விசுறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   

காவியுடை அணிந்துள்ள ரத்தன தேரரைப் பார்வையிடுவதற்காக, கார்டினல் ​மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்பகுதிக்குச் சென்றமையானது, தொடர்ந்தும் பிரிவினைவாதத்துக்கே வழிசமைப்ப​தாகவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.   

பாப்பரசர் மற்றும் வத்திக்கான் செய்திச் சேவைகள், பேராயரின் இந்தச் செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென்றும், அவர் அந்த டுவிட்டர் பதிவினூடாகக் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .