Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 04 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ரத்தன தேரரைப் பார்வையிடுவதற்காக, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நேற்று (03) காலை அங்கு சென்றிருந்தமை குறித்து, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, இதனூடாகப் பிரிவினைவாத மற்றும் வெறுப்புத் தீக்கு காற்று விசுறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காவியுடை அணிந்துள்ள ரத்தன தேரரைப் பார்வையிடுவதற்காக, கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்பகுதிக்குச் சென்றமையானது, தொடர்ந்தும் பிரிவினைவாதத்துக்கே வழிசமைப்பதாகவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாப்பரசர் மற்றும் வத்திக்கான் செய்திச் சேவைகள், பேராயரின் இந்தச் செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென்றும், அவர் அந்த டுவிட்டர் பதிவினூடாகக் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
58 minute ago
1 hours ago