2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி மாயம்

Simrith   / 2024 மார்ச் 26 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் T-56 துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தர் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் பாதுகாப்புச் சாவடியில் ஆயுதம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி திருடப்பட்டதா அல்லது காணாமல் போனதற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X