2025 ஜூன் 18, புதன்கிழமை

போதைப்பொருளுடன் 473 பேர் கைது

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், பொலிஸார் மேற்கொண்டிருந்த சுற்றிவளைப்புகளில் போதைப்பொருள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 473 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​ஹெரோயின் வைத்திருந்த 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து 159 கிராமும் 14 மில்லிகிராம் ஹெரோயினும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 47 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சாவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 கிரேமும் 165 மில்லிகிரேம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .