2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மோதிரம் கிடைத்தது

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வைபவமொன்றில் பங்கேற்றிருந்த போது காணாமல் போன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மோதிரம், கடும் தேடுதலுக்கு பின்னர் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில், மிகமுக்கியஸ்தரின் உறவினருக்கு திருமணம் நடைபெற்றது. அதில், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார். அந்த வைபவத்துக்கு வந்திருந்தவர்கள் மஹிந்தவுக்கு கைகொடுத்தனர்.

இந்நிலையில், மாணிக்கக்கற்கள் பொதிக்கப்பட்ட தன்னுடைய மோதிரம் காணாமல் போய்விட்டதாக, திருமண வைபவத்தில் பங்கேற்றிருந்த முக்கியஸ்தர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் அந்த முக்கியஸ்தர்கள் ஹோட்டல் நிர்வாகத்தின் கவனத்துக்குகொண்டுவந்தனர். அதன் பின்னர், சேவையாளர்கள் ஊடாக அந்த மோதிரம் கண்டெடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X