2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மீனவர்களை மீட்குமாறு வாசன் வலியுறுத்து

George   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழக மீனவர் பிரச்சினையில் சிறந்தத் தீர்வு ஏற்படுத்த மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்'என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி அறிக்கையொன்றை சனிக்கிழமை வெளியிட்டள்ளார்.

'இலங்கை கடற்படையால் மீன்பிடித் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையின் அராஜகச் செயலை மத்திய-மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். இந்தப் பிரச்னையில் மத்திய பாஜக அரசு மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கிறது.

எனவே, இலங்கை வசமுள்ள 4 மீனவர்களையும், 114 படகுகளையும் மீட்பதற்கும், சேதமடைந்த 18 படகுகளுக்கு முழு நிவாரணம் பெற்றுத் தருவதற்கும் இந்திய மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று சுமுகத் தீர்வு எட்டப்படும் வரை மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு இலங்கைக்கு உறுதிபடத் தெரிவிக்க வேண்டும்' என அந்த அறிக்கையில் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .