Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து டிசம்பர் 6 ஆம் திகதி காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி 10 நாள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனகொண்டா குட்டி, அடைத்து வைக்கப்பட்டிருந்த சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அலுமாரியில் ஒரு டிராயருக்கு அடியில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.
காணாமல் போனதிலிருந்து மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் பகல்நேர தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், அதே நேரத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேர தேடல்கள் தொடங்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.
அனகொண்டா குட்டி அதன் அடைப்பில் உள்ள மிகச் சிறிய துளை வழியாக தப்பித்து அலமாரி டிராயருக்குள் மறைந்திருந்ததாக பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர விளக்கினார்.
குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மலைப்பாம்பு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பொதுவாக வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உணவளிப்பதாகவும், எனவே இளம் அனகொண்டா காணாமல் போன காலத்தில் எந்த உணவுப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனகொண்டா குட்டி இப்போது கண்காணிப்புக்காக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சமரசேகர மேலும் கூறினார்.
9 hours ago
9 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
17 Dec 2025