Freelancer / 2026 பெப்ரவரி 22 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 'சிவப்பு நிற' (நிலை 3) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
கண்டி மாவட்டம்: யட்டிநுவர, தொலுவ, உடுதும்பர மற்றும் கங்கா இஹல கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, கேகாலை, தெஹியோவிட்ட, அரநாயக்க மற்றும் மாவனல்லை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, லக்கல பல்லேகம, வில்கமுவ மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
இதேவேளை, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும், உள்ளூர் அதிகாரிகளினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் ஏதேனும் அவசர நிலையின் போது காவல்துறை மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (a)
57 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
6 hours ago