Simrith / 2025 மே 18 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில் மே 16 ஆம் திகதி மதியம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை பிரதேச போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) க்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபர் மே 23 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்த நபர் மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் போது, OIC பதிவு செய்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி (SSP) மே 17 முதல் குறித்த அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளார்.
24 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago