2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

‘மதுஷுடன் 7 மாதங்கள் ஒன்றாக இருந்தேன்’

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாளக்குழுவின் தலைவர் மாக்கந்துர மதுஷுடன் தான் 7 மாதங்கள் ஒன்றாக சிறையில் இருக்க நேர்ந்ததாகத் தெரிவித்துள்ள நாமல் குமாரஅரசியல் தேவைகளுக்காக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தான் எந்த​வொரு குற்றச்சாட்டுகளும் இன்றி, 14 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரையும் கொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக, தான் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்த பின்ன​ரே, தான் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

​மேலும் ஷானி அபேசேகரவுடன் ஒன்றாக சிறையில் இருக்கும் குற்ற விசாரணைப் பிரிவின் முனசிங்கவின் அலைபேசியை எடுத்து பார்த்தால், அவருக்கு அரசியல்வாதிகளுடன் எவ்வாறு தொடர்பு இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும், இதுதொடர்பில் சிறையில் இருந்த 7 மாதங்கள் நன்றாக தெரிந்துகொண்டதாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .