Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜிதபுர, கணக்கன்மடுவ பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஜெமால்தீன் பதூர்தீன் மற்றும் விஜிதபுர, புளியங்குளம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய தென்னகோன் முதியன்சேலாகே ஜக்சன் சேனாரத்ன தென்னகோன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் கணக்கன்மடுவ மற்றும் புளியங்குளம் பகுதிகளில் அமைந்துள்ள தமது விவசாய நிலங்களில், நிலத்தை பண்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பதூர்தீன் என்பவரது சடலம் அவரது இல்லத்திலும், தென்னகோன் என்பவரது சடலம் கலாவெவ வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த திடீர் மரணங்கள் குறித்து, இப்பலோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
58 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
58 minute ago
2 hours ago