2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மரத்தின் மீதேறி நனிநபர் போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

பேருவளை கடற்கரை மைதானத்துக்கு அருகிலுள்ள மரம் ஒன்றின் மீதேறி, நபரொருவர் இன்று (04) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டில்  யாவருக்கும் பொதுவான ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட  வேண்டுமெனத் தெரிவித்து, பதாகைகளைக் காட்சிப்படுத்தியவாறு, குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

காலவில பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸார் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தவில்லை எனவும் இதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்துக்குச் ​சென்று  களுத்துறை உதவி பொலிஸ் அதிகாரி நிஷாந்த சில்வா, குறித்த நபரை மரத்திலிருந்து கீழே இறங்குமாறு பல தடவை எடுத்துரைத்தும் அவர் கீழே இறங்க மறுத்துள்ளார்.

குறித்த நபர் இன்று (04) காலை 8.00 மணி தொடக்கம்  இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .