2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மற்றுமொரு நபரும் மின்னுயர்த்தியில் சிக்கினார்

Editorial   / 2019 ஜனவரி 03 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானையில் அமைந்துள்ள பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்குரிய கட்டடமொன்றிலுள்ள மின்னுயர்த்தியில் நபரொருவர் சிக்கிய சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

எனினும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினால் மின்னுயர்த்தியில் சிக்கிய நபர் மீட்கப்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த 29ஆம் திகதி கொழும்பு- கொம்பனித்தெரு வீதியில் அமைந்துள்ள களியாட்ட விடுதியின் மின்னுயர்த்தி உடைந்து விழுந்ததில் ரகர் விளையாட்டு வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .