2025 ஜூன் 18, புதன்கிழமை

மற்றுமொருகழிவுத் தேயிலை கொள்கலன் கைப்பற்றப்பட்டுள்ளது

Editorial   / 2020 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்குக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்த மற்றுமொரு கழிவுத் தேயிலை அடங்கிய கொள்கலன் ஒன்று சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கருவா ஏற்றுமதி செய்வதாகத் தெரிவித்து, கடந்த 17ஆம் திகதி இந்த கொள்கலன் ஏற்றுமதி செய்ய தயார் செய்யப்பட்டதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கழிவுத் தேயிலை கொள்கலனுடன் தொடர்புடைய சந்தேகநபரை ஆகஸ்ட் 4ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுங்கப் பிரிவினரால் உறுதிப்படுப்பட்டுள்ள தகவல்களுக்கமைய, இதுவரை 252 கழிவுத் தேயிலை அடங்கிய கொள்கலன்கள் ஈராக்குக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனுடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள் கைது​செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .