2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மழையுடனான வானிலை தொடரும்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழையுடனான வானிலை எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை,  பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தப்போவ, அங்கமுவ, இராஜாங்கனை, தெதருஓயா மற்றும் குக்குளே கங்க ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பில் இன்று (22) காலை முதல் பெய்து வரும் கடும் மழையினால் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X