2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவிடம் ரூ.1 பில்லியன் கோருகிறார் மைத்திரி

Simrith   / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தனக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு அறிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயாராக உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து தான் 100 மில்லியன் ரூபாய் பணம் பெற்றதாக அமைச்சர் அமரவீர ஊடகங்களுக்கு அவதூறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என  மைத்திரிபால சிறிசேன அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனது தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் அமைச்சர் அமரவீர அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மகிந்த அமரவீரவின் அவதூறுகள் மூலம் தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக 1 பில்லியன் ரூபாவை மகிந்த அமரவீர வழங்க வேண்டுமென மைத்திரிபால சிறிசேன அக் கடிதத்தில் கோரியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X