Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 14 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் (14) ஓய்வுபெறப் போவதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் 502ஆவது அறையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக்க அலுவிஹார மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில், மஹிந்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை இடம்பெற்று வருகின்றது.
இந்த வழக்குக்காக, மேற்படி நீதியரசர்கள் குழாம் வந்து அமர்ந்ததை அடுத்து உரையாற்றத் தொடர்ங்கிய நீதியரசர் புவனெக்க அலுவிஹார, 40 வருடகாலச் சேவையை இன்றுடன் பூர்த்தி செய்யும் நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் ஓய்வுபெறப் போகிறாரென அறிவித்ததோடு, அவருக்கான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025