Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 மே 09 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் இன்று கொழும்பில், நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ள குமார சங்கக்கார, தங்களது அடிப்படைத் தேவைகைள் மற்றும் உரிமைகளைக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, அரசாங்கத்தில் உள்ள குண்டர்கள் மற்றும் குண்டர்களின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேப்போல் இந்தச் சம்பவம் அருவருப்பானது என்பதுடன் திட்டமிட்ட ஒன்று என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு பிரதமர் விடுத்துள்ள அறிக்கைக்கும் குமார சங்கக்கார கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதியாகப் போராடுபவர்களைத் தாக்கும் ஆளும் அரசாங்க ஆதரவு குண்டர்களின் கேவலமான செயற்பாட்டை கண்டிப்பதாக முன்னாள் வீர்ர் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
28 minute ago
50 minute ago