2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மாகாண சபை குறித்து சு.க அதிரடி

Editorial   / 2021 ஜனவரி 01 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கான யோசனையை முன்வைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அது தொடர்பான யோசனையை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ளதால், குறித்த நிறுவனங்களைச் செயற்பாட்டில் வைத்திருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .