2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மானிப்பாய் வீட்டின்மீது கும்பல் தாக்குதல்

Editorial   / 2019 மார்ச் 07 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசாந்த்

யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம்  இரவு புகுந்த கும்பலொன்று, வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், வீட்டிலிருந்த பெறுமதியான உபகரணங்களை அடித்துச் சேதமாக்கி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

அத்துடன், வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்துச் சேதமாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டுவில், சுன்னாகம், மானிப்பாய் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு, வாள் வெட்டுக்குழுக்கள் நடமாடி, அப்பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளன. அத்துடன், வாகனங்களையும் சேதமாக்கியுள்ளன.

அதேவேளை, நேற்று முன்தினம் இரவு யாழில் உள்ள பல வீதிகளில் "ஆவா 001 ராஜ்ஜியம்" என கறுப்பு நிற வர்ணத்தால் எழுதப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X