Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 26 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக, மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மீது, தாக்குதல் நடத்தியமைக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கு பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாலியில் நேற்று (25) நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இவ்வாறான கோழைத்தனமான தாக்குதல் நாட்டின் சமாதானத்துக்கான உறுதிப்பாட்டைத் தடுக்காது என்றும் இதேவேளை, ஐ.நா அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதல்கள், சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களாக கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேற்றைய தாக்குதலில், புர்கினோ ஃபாசோவைச் சேர்ந்த அமைதி காக்கும் படை வீரர் ஒருவரும் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago