Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின் பொறி வைத்து யானையொன்றை கொலை செய்த நபரொருவரை பொலிஸார் இன்று (02) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
ஹபரன – புவக்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, மின் பொறியினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குறித்த யானையினது உடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் புவக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த குறித்த யானையானது, 7 அடி உயரமும், 15 வயதானதெனப் பொலிஸார் தெரிவித்ததோடு, குறித்த யானையினது உடலத்துக்கான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட வேளையில், குறித்த நபர் சட்டவிரோதமாக மின்சாரத்தை உபயோகித்து பயன்படுத்தி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், இன்று (02) கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago