2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மின்சாரக் கட்டணத்துக்கு சலுகைக்காலம் நீட்டிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த சலுகைக்காலம், எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டதன் பின்னர், தவணைமுறையில் மின்சாரக் கட்டணத்தை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டணங்கள் மிகுதியின்றி முற்றாக செலுத்தப்படும் வரை தொடர்ந்தும் மின்சாரம் வழங்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .