Freelancer / 2023 நவம்பர் 28 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் - சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்குதலுக்குள்ளாகி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த கஜந்தன் (வயது 26) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
அலுவகத்தில் பணியில் இருந்த வேளை , தண்ணீர் வராததால் , தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக சென்ற வேளை , அங்கிருந்த மின் வயரில் ஏற்பட்ட சேதம் காரணமாக பணியாளருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
அதனை அடுத்து அலுவகத்தில் கடமையில் இருந்த ஏனையவர்கள் இளைஞனை, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். M
எம்.றொசாந்த்


28 minute ago
29 minute ago
43 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
43 minute ago
58 minute ago