2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி யானை பலி; வீட்டின் உரிமையாளர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை – உஹன குமாரிகம கிராமத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில், மின்சாரம் தாக்கியதில் காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த யானையானது, குறித்த வீட்டின் அருகில் உணவு தேடி வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் வீட்டிலுள்ள மின்குமிழ்களை பிரகாசிக்கச் செய்தமையினால் மிரண்டு போன  யானையானது, வீட்டின்  மின் வயர்களை இழுக்க முற்பட்ட வேளையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில்  வீட்டின் உரிமையாளரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .