Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் கோழிப் பண்ணைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை உரிமையாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு முட்டையின் விலை 70 ரூபாய்க்கு மேல் உயர்வதைத் தடுக்க இயலாது என்றும் அவர் கூறினார்.
அரிசி, காய்கறிகள் மற்றும் மீன்பிடித் தொழில் போன்ற விவசாயப் பொருட்களுக்கு வற் வரி விதிக்கப்படவில்லை என்றாலும், கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
முட்டை உற்பத்தி அதிகரித்திருந்தாலும், முட்டைகளுக்கான தேவை குறைந்து வருவதால் நாட்டில் முட்டை உற்பத்தி உபரியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
முட்டை உற்பத்தியாளரின் வருமானத்தின் அடிப்படையில் VAT நிர்ணயிக்கப்படுகிறது என்றும், முட்டை உற்பத்தியாளர்கள் அதற்கேற்ப தங்கள் வரி கோப்புகளைத் திறக்க வேண்டும் என்றும் தலைவர் கூறினார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago