2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீண்டும் எரிபொருள் வரிசை

Editorial   / 2023 மே 31 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

 

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்கள் பலவற்றில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

எரிபொருளின் விலை இன்று (31) நள்ளிரவுடன் குறைவடையலாம் என தெரிவித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லாத நிலை காணப்பட்டது.

ஆயினும், ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெட்ரோல் கையிருப்பில் இருந்தமையால், தூர பிரதேச வாகனங்களும் அங்கு வருகைதந்தன.  அங்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

  வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுடன் அங்கு வருகை தந்த வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.

அதிகளவான வாகனங்களின் வருகையால் சில மணிநேரத்தில் அங்கும் எரிபொருள் முடிவடைந்தது.

ஆயினும், பெட்ரோல் கொள்வனவுக்கு பணம் செலுத்துப்பட்டுள்ளதால் நாளை (01) எரிபொருள் கிடைக்கும் எனவும் வழமைபோன்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள் நிலைய உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .