Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 18 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். ஷிவானி
பெலவத்தை மற்றும் செவனகல ஆகிய சீனித் தொழிற்சாலைகளை, மீண்டும் அமைச்சர் தயா கமகேவுக்கு கையளிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
செயற்பாடுகள் குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துகளும் புத்துயிரளித்தல் சட்டத்தை நீக்குவதற்கானதொரு சட்டமூலத்தை, எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அரசாங்கம் தயாராகிவருவதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடு குறித்து, பாரிய மக்கள் புரட்சி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago