Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில், கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதோடு, மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென்பதால், கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால், மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில், மிகவும் அவதானம் தேவையென, திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது, சூறாவளியாக (லூபன்) மாறி, கொழும்பிலிருந்து 2 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலைமை, எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மேலும் மோசமடைந்து, கடுமையான சூறாவளியாக, மேற்கினூடாக வடமேல் நோக்கி நகருமென்றும் இதனால், தற்போது தாழமுக்கம் ஏற்பட்ட பிரதேசத்திலிருந்து சுமார் 100 முதல் 200 கிலோமீற்றர் வரை நகரக்கூடுமென்றும் இதனால், கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழையுடன் கடற்பரப்பும் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுவதோடு கடும் காற்று வீசக்கூடுமென்றும், வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
35 minute ago
1 hours ago