Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல முச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 31 மற்றும் 54 வயதுக்கிடைப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை கொழும்பு மத்திய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சீதுவ, ஒருகொடவத்தை, கொழும்பு 10, மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
இரகசிய தகவலின் பேரில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் டிசம்பர் 27 அன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின் போது, ஒரு சந்தேக நபர் 'ஐஸ்' உடன் கைது செய்யப்பட்டார், இதனையடுத்து அவர் வாயிலாக ஒன்பது திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
மறுநாள் (நேற்று 28) சீதுவ, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இடங்களில் திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை வைத்திருந்த மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கோட்டை, கிரிபத்கொட, வத்தளை, பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கோட்டை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
52 minute ago