2025 மே 09, வெள்ளிக்கிழமை

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரின் வீட்டில் திருட்டு

Freelancer   / 2023 மே 30 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான சமிந்த சிறிசேனவின் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமதியுடைய, சுமார் 6 பவுன் தங்க மோதிரம், ஐம்பது அமெரிக்க டொலர் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, அதுமல்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேற்குறிப்பிட்ட நீலக்கல் மோதிரம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலன்னறுவை பொலிஸார், மோதிரம் மற்றும் பணத்தை திருடியவர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X