Simrith / 2024 டிசெம்பர் 17 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முப்படையினரால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படுமென அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த பதினொரு மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதற்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அது பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயலென அமைச்சர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசீலனை செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago