2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மோதலால் ஒருவர் உயிரிழப்பு

Nirosh   / 2022 மே 09 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயாகல பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயாகல - மில்லகஸ் உடமுல்ல பிரதேசத்தில் நேற்றிரவு (8) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த நபரை நாகொட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில், வைத்தியசாலைக்கு அழைத்துவருவதற்கு முன்பே அந்நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பயாகல, தங்வத்த அக்கரவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய சன்ன சபரமாது என்கிற நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .