2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

யாழ். நீதிமன்றில் கெஹகலிய

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல, யாழ். நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். 

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ். நகரில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில் முன்னாள் ஊடக துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவை சாட்சியாகப் பதியுமாறு முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார். 

காணாமல் போன இருவரையும், பாதுகாப்புப் படையினர் கைதுசெய்துள்ளதாக ஊடகதுறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டார் என்பதனால் அவரைச் சாட்சியாகப் பதியுமாறு சட்டத்தரணி கோரியிருந்ததை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X