2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யோஷிதவை பார்க்க வரையறை

Thipaan   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவைப் பார்வையிடச் செல்வோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வரையறை விதிக்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்ல்டன் விளையாட்டு நெட்வோர்க் பிரைவேட் லிமிட்டெட்டில், நிதி மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் யோஷித உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X