2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

யாழில் சோகம்: அண்ணன், தங்கை உயிரிழப்பு

Editorial   / 2026 மார்ச் 17 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

  யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அண்ணனும் தங்கையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை வீதியில், நெடுங்குளம் சந்திக்கு அருகில் மார்ச் 916) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புத்துறை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம் மாணியம்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரொபின்சன் டட்னி (24 வயது - அண்ணன்) ரொபின்சன் டில்ஷிகா (19 வயது - தங்கை) இருவர் உயிரிழந்துள்ளனர்:

 

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக டிராக்டர் ஓட்டுநரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X