2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

Freelancer   / 2022 நவம்பர் 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதஞ்சன்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் பகுதியில் நேற்று (24) மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

மண்வெட்டி பிடி வெட்டுவதற்க்காக காட்டிற்கு சென்ற குடும்பஸ்தரே யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் வசித்து வருகின்ற பச்சைமுத்து-புலேந்திரன் (வயது48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .