2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

யாழில் அச்சுறுத்தி தங்க நகைகள் கொள்ளை

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் , மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள் மற்றும் கோடரிகளுடன் வீட்டினுள் நுழைந்த 06 பேர், வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .