Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 10, வெள்ளிக்கிழமை
J.A. George / 2021 ஜூலை 01 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவில் இலங்கை பஸ் டிப்போவுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன், அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
சம்பத்தில் வாகனங்கள் உள்பட பெறுமதியான பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
6 hours ago
7 hours ago
9 hours ago