2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் வெடித்தது மத்தாப்பூ: பொலிஸ்

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் கேட்கப்பட்ட வெடிப்புச் சத்தம், மத்தாப்பூ வெடிப்புச் சத்தமென, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

நேற்றைய தினம் வெடிக்கச் செய்த மத்தாப்பில் ஒன்று, வெடிக்காத நிலையில் காணப்பட்டு, அதுவே இன்று காலை வெடித்ததாக, பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில், வெளி வளாகத்திலிருந்து வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது.

எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் அதனை யாரும் பொருட்படுத்தவில்லையென்றும் பின்னர் அது குண்டுவெடிப்பாக இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விரைந்து மேலதிக விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே, மத்தாப்பூ தான் அப்பகுதியில் வெடித்துள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .