2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ரூ.36 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

George   / 2016 ஜூன் 06 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட வல்லப்பட்டையுடன் ஒருவர், இன்று (06) அதிகாலை 1 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடத்த முற்பட்ட இந்த வல்லப்பட்டையின் மதிப்பு சுமார் 36 இலட்சம் ரூபாய் ஆகும்.

குறித்த நபரின் நடத்தை தொடர்பில் சந்தேகமடைந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி, அது தொடர்பில்  விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிகையின் போது தனித் தனியாக பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டை அரச உடைமை ஆக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .