Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சிபிஐ விசாரித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதில் மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025