Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 நவம்பர் 07 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, ரஞ்சித் மத்தும பண்டாரவின் செயற்பாடு சட்டவிரோதமானது மட்டுமல்ல தேசிய ரீதியில் பெறுமதியற்றதென அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இன்று (7) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
நேற்று (6) அரச நிறுவனங்களுக்கு ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையெழுத்துடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதெனவும், இதில் சபாநாயகரே புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், புதிய அரசாங்கத்தின் கடமைகளை அரச பணியாளர்களான நீங்கள் முன்னெடுத்தால், அதன் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் , புதிய அரசாங்கத்தின் அறிவுரைகளுக்கமைய முன்னெடுக்க வேண்டாமெனவும், தெரிவித்து சகல அரச பணியாளர்ளுக்கும் கடிதம் ஒன்று அனுப்பட்டுள்ளமைத் தொடர்பில் அரச பணியாளர்களை தெளிவுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையென்றும் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
21 minute ago
24 minute ago