2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது

Editorial   / 2025 ஜூலை 22 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் கூறி அவர்களை கைது செய்தனர்.
 
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொல்வதும், கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. தமிழக அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் சற்று குறைந்திருந்தாலும், கைது நடவடிக்கை அடிக்கடி நடைபெறுகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதை நாட்டுடைமையாக்கும் வேலைகளையும் இலங்கை அரசு செய்து வருகிறது. மேலும், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் கூட, தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இன்று காலை ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் விசைப்படகில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி கைது செய்தனர்.

மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். கைதான மீனவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்படுவார்கள் என்றும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழக மீனவர்களை கைது செய்து வருவதாகவும்,கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .