Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 11 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தால் பறித்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளப் பெற்றுக்கொடுக் ஆதரவளிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.
மாவனெல்லை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதற்கான அதிக வாக்குகளை பெற்றுத்தருமாறும் அவர் கோரினார்.
மேற்படி அரசமைப்பு திருத்தம் ஜனநாயக உரிமைகளை பரித்துக்கொண்டுள்ளதென தெரிவித்த அவர், அந்த திருத்தம் ராஜபக்ஷபக்ஷர்களை பழிவாங்கும் நோக்கிலேயே செய்யப்பட்டதெனவும் தெரிவித்தார்.
மூன்றாது தடவையாக ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதென்று திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் தனது அரசியல் செயற்பாடுகளி முடக்கப்பட்டனவென தெரிவித்த அவர், இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாட்டின் தலைவராக முடியாதென மேற்கொள்ளப்பட்ட திருத்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ ஆகியோரை முடக்குவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
அத்தோடு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லையை 35 ஆக அதிகரித்து நாமல் ராஜபக்ஷவுக்கு தடையிட்டனரெனத் தெரிவித்த அவர், அரசியல் பழிவாங்கள்களும் உக்கிரமாக காணப்பட்டன என்றார்.
அதேபோல் பாணந்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,
தங்களது ஆட்சியில் ஒருபோதும் நாட்டின் வளங்களை விற்கப்போவதில்லை என்றும், அவை இந்நாட்டில் வாழப்போகும் அடுத்த சந்ததியினருக்கே சொந்தமெனவும் தெரிவித்தார்.
அதனால் சரியானதொரு தூரநோக்கு உள்ளதால் அரசாங்கம் தோல்வியை பற்றி அஞ்சவில்லை எனத் தெரிவித்த அவர், தாம் ஒருபோதும் இனவாதம் பேசியதில்லை என்றார்.
தாம் ஒருபோதும் தமிழர்களுக்கு எதிராக போரடவில்லை என்பதோடு, பயங்கரவாதிகளுடன் மாத்திரமே போராடியதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக்கொடுத்து, அவர்களுடைய மக்கள் பிரதிநிதிகளையும், தெரிவு செய்துக்கொள்ள அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, தமது ஆட்சிகாலத்திலேயே நாட்டில் 100 சதவீதமாக மின்சாரம் பெற்றுக்கொடுக்கபட்டது என்றும், அடுத்த ஆட்சியில் 100 சதவீதம் நீர் விநியோகச் செயற்பாடுகளை வழங்குவது பற்றியே சிந்திப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago