Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஜூன் மாதம் முதல் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் மீன்வள அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக பிடியாணை பெற்றுள்ள ராஜித சேனாரத்னவை கைது செய்ய முயற்சித்த போதிலும், சந்தேக நபர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் கைது தோல்வியடைந்ததாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அளித்த ஆதாரங்களை பரிசீலித்த பின்னர், இந்த உத்தரவை பிறப்பித்தது.
1979 ஆம் ஆண்டு 15 ஆம் எண் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் துணைப் பிரிவு 60 (1) இன் கீழ் சிங்களம் மற்றும் தமிழில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபராக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட புகாரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கவும், அதே நாளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சிங்களம் மற்றும் தமிழில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தொடர்பான வெளியீடு, சந்தேக நபர் ராஜித வசிக்கும் மற்றும் சுற்றித் திரியும் இடங்களில் காட்சிப்படுத்தப்படும், மேலும் உத்தரவு தொடர்பான வெளியீடு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலும் காட்சிப்படுத்தப்படும்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago