2024 மே 20, திங்கட்கிழமை

ராமர் கோயிலில் தாக்குதல் நடத்த பாக். தீவிரவாதிகள் சதி

Editorial   / 2024 ஜனவரி 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசம், அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறை பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என 11,000 மிகவும் மிக முக்கியமான நபர்கள் பங்கேற்க உள்ளனர்.

ராமர் கோயில் திறப்பு விழாவின்போது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவின்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக அயோத்தி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படையிடம் (எஸ்பிஜி) அயோத்தி நகர பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி), தீவிரவாத தடுப்புப் படை, சிறப்பு கமாண்டோ படை, சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மாநில போலீஸார் என சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் 11,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் அயோத்தி முழுவதும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் பழைய குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காண முடியும். ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

அயோத்தி மட்டுமன்றி உத்தர பிரதேசம் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக உத்தர பிரதேசத்தை ஒட்டியுள்ள நேபாளத்தின் 570 கி.மீ. தொலைவு எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து பணி நடைபெறுகிறது.

அயோத்தி நகர பாதுகாப்பு குறித்து உத்தர பிரதேச பொலிஸ் வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த 18-ம் திகதி முதல் அயோத்தி நகரின் பாதுகாப்பு எஸ்பிஜி படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை முதல் அயோத்தி நகரம் முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நகரின் பிரதான சாலைகள், தெருக்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X