Mayu / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டைப் போலவே உருவாக்கப்பட்ட வங்கி போலி வெப்சைட் (Phishing Site) ஒன்றின் மூலம் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து, ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் (ரூ.10,00,024) மோசடி செய்த 22 வயது இளைஞர் ஒருவரை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர், வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் நேற்று (20) கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் வாரியபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று (21) குருணாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பொலிஸ் மக்களுக்கு விசேட எச்சரிக்கை:
இணையத்தில் வங்கி பரிவர்த்தனைகள் செய்யும்போது, உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை மட்டுமே பயன்படுத்துங்கள். குறிப்பாக SMS அல்லது Email மூலம் வரும் இணைப்புகளை கிளிக் செய்வதற்கு முன், அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துங்கள்.
இத்தகைய நவீன மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு அவசியம் என தெரிவித்துள்ளனர்.
45 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
55 minute ago
1 hours ago