2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரூமி மொஹமட்டின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டுக்கு பிணை வழங்குவதற்கான காரணங்களை முன்வைக்க விடுக்கப்பட்ட  கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்தினம் (31) காலை சரணடைந்ததை அடுத்து,  ரூமி மொஹமட் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு அமைய, அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்திருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு பிணை வழங்குவதற்காக காரணங்களை முன்வைக்க அவரது சட்டத்தரணிகள்  முன்வைத்த கோரிக்கை மனுவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (02) நிராகரித்தார்.

அத்துடன், எதிர்வரும் 06ஆம் திகதி இடம்பெறும் வழக்கு விசாரணைகளின் போது, காரணங்களை முன்வைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .